பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

மோனேஜரு சொன்னாருங்க. நீங்க சமா தானம் பண்ணி, பணத்தைக் குடுக்கல்லேன்னா, போலீசிலே எங்களை ஒப்படைச்சு இந்நேரம் கம்பி எண்ண வெச்சிருப்பாரு..??

'நிதானமாயிருக்கறப்போ, எல்லாம் அழகாத் தான் பேசறே. இப்படி எத்தனை நாளைக்குத் தான் ஊர்க்காரங்க எனக்கு மரியாதை கொடுத்து உங்களை விட்டு வெச்சிருப்பாங்க? எல்லாத்துக் குமே ஒரு எல்லை உண்டு இல்லையா??

'மாரியாத்தா பொதுவா, இனிமே அந்தப் பக்கம் தலைவெச்சுப் படுக்கமாட்டேனுங்க’’.

'ஆறுமுகம், சாமியை எதுக்குடா இப்ப இழுக்கறே? சத்தியம் தான் சர்க்கரைப் பொங்க லாச்சே உங்களுக்கு. குடிச்சிட்டுத் திரியற நீங்க பண்ணற சத்தியமெல்லாம் பலிக்கிறதுன்னா; உங்க அத்தினிபேரோடு தலையும் என்னிக்கோ, பொடிப் பொடியாயிருக்கும். உங்க பொய்ச் சத்தியத்துக்குப் பயந்து, சாமியே ஊரை விட்டுப் போய் ரொம்ப நாளாச்சுடா ஆறு முகம்,’’ என்று பலவேசம் கூறிக் கொண்டிருக்கும் போதே, களத்துமேட்டு ராமன் பவ்யமாக வந்து நின்றபடி, *வணக்கங்க எஜமான்’ என்றான்.

பலவேசம் பிள்ளை அவனைப் பார்த்து, **ஆமாம், நீங்க ரெண்டு பேரு மாத்திரம் வந்திருக்