பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38

ஆனா உங்களுக்கு மன உறுதியும், பூரண நம்பிக் கையும் இருந்தா மட்டும் இந்தக் காரியத்திலே இறங்குங்க; இல்லேன்னா வேண்டாம்.

இது ஒரு நல்ல காரியத்துக்கு; எல்லாத்துக்கு மேலே நம்ம குடும்ப நன்மைக்கு என்கிற முழு எண்ணண்த் தோடு ஈடுபட்டு, அதுக்காகச் சில பேர் செத்தாக் கூட ஒரு பெருமைதான்; தியாகம் தான். அவர்களுடைய மரணம், மற்றவர் களுடைய கண் களைத் திறக்கும்; புத்தியை மாற்றும். இதை ஒடு தியாகப் போரா அகிம்சை முறையில் நடத்தனும். அதுக்கு, இங்கே கூடி இருக்கிற வங்கள்லே, எத்தனை பேரு தயார்?’’ என்று ஒரு சவாலைப் போல் பலவேசம் பிள்ளை கேட்கவும், எதிரே உட்கார்ந்திருந்த அத்தனை பேருமே ஆவேசத்துடன் எழுந்து நின்று, 'நாங்கள் அத்தனை பேருமே தயார்’’ என்று கைகளை உயர்த்தி கோரசாக ஒலித்தனர்.

நெதக்கும் அடிபட்டு அடிபட்டு, உடம்பெல் லாம் காய்ச்சுப் போச்சு; அதைவிட, இதுக்காக, மதுக்கடை வாசல்லே சாவறது எவ்வளவோ மேலுங்க’’. ஒரு பெண் அழுதாள்.

பல வேசம் பிள்ளையின் அருகில், பூவாயி வந்து நின்று கொண்டிருந்தாள்.

நாங்கள்ளாம், ரொம்ப நொந்து போயிருக் கிறோம். எப்படியாவது புருஷன் மாரு மனசு