48
48
னைப் போல், அந்த இடத்தில் அத்தனை நாள் தாக்குப் பிடித்துக்கொண்டு கடை நடத்தியவர்கள், வேறு யாருமில்லை. காரணம் ஆரம்பத்தில் அவன் கடன் கொடுத்து கிராக்கியைப் பிடித்து வலையில் போட்டுக் கொண்டான்.
வியாபாரத் திறமையினாலும், பேச்சு சாதுர் யத்தினாலும், தன்னுடைய வாட்ட சாட்டமான உடம்பைக் காட்டி பயமுறுத்தியே ஒரு வம்பு தும்பு இல்லாமல் இத்தனை காலம் சமாளித்துக் கொண்டு வரும் காடையனே, ஒரு கணம் பிர மித்துப் போனான்.
பெரும் கூட்டமாக இத்தனைக் குப்பத்துப் பெண்களும் எதற்காகத் தன் கடையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவ னுக்கு விளங்கவில்லை.
இன்று சம்பளத் தேதியானதால், இங்கேயே வசூல் பண்ணிக் கொண்டு போய்விட வேண்டு மென்று புருஷனைத் தேடி வருகிறார்களா அல்லது ஒருவேளை புருஷனோடு போட்டி போட்டுக் கொண்டு, அவர்களும் இங்கே குடிக்கத்தான் வரு கிறார்களோ!
'பாரதமாதாவுக்கு...??--முதல் குரல் எழுப்பி யவள் பூவாயிதான்.
'ஜே’’- பொன்னியைத் தொடர்ந்து அனை வரும் கோரசாக வழி மொழிந்தனர்.