பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86

செய்து அதை அடிபட்ட காயத்தின் மீது வைத்து கட்டுப் போட்டார்.

உள்ளுக்குச் சாப்பிட ஒரு கஷாயத்தையும் ராமன் வாயில் ஊற்றினார். இன்னும் கொஞ்ச நாழிலே வலி நின்னு, மயக்கம் தெளிஞ்சிடும். வீட்டிலே கொண்டு போய் படுக்க வையுங்க. காலமே வந்து வேறே கஷாயம் வாங்கிட்டுப் போங்க’ என்று அனுப்பி வைத்தார். -

பாதிவழியிலேயே ராமனுக்கு நன்றாக நினைவு வந்து விட்டது. வீட்டிற்கு நான் நடந்து போய்க் கொள்கிறேன் என்ற வார்த்தையை அவனது நண்பர்கள் கேட்கவில்லை.

மத்தியானம் சிரித்துப் பேசிச் சாப்பிட்டு விட்டுச் சென்ற புருஷனை, நாலு பேர் இசுமந்து வந்து வீட்டிற்குள் கிடத்தியதையும்; தலையில் போடப்பட்டிருந்த பெரிய கட்டையும் பார்த்து பொன்னி பதறிப் போனாள். o

'பலவேசம் பிள்ளைன் னு நெனச்சிக்கிட்டு, ஆறுமுகத் தண்ணன், 厚TLQ反D6可 அடிச்சுப் பிட்டது, என்பதைத் தவிர அவர்கள் வேறு ஒரு தகவலும் சொல்லவில்லை.

பொன்னி பெரிசாக அழுதாள்.