பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

38

துடனும்; கட்டுக்கடங்காத கோபத்துடனும் பூவாயியின் வீட்டை நோக்கி நடந்தாள்.

8.

'மதுவிளைவித்த பழிபாவங்களை நினைத் தும், அது குட்டிச்சுவராக்கிய குடும்பங்களை தினைத்தும், இன்னும் பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு அது விளைவித் துள்ள கொடுமைகளை நினைத்தும். அது உடைத்து நொறுக்கிய இதயங்களை நினைத்தும் நான் மதுவை எப்போதுமே வெறுக்கிறேன்"

-இந்தியாவின் மாஜி கவர்னர் ஹான்லி.

அவசரம் அவசரமாக வீட்டுக் காரியங்களை முடித்துக் கொண்டிருந்தாள் பூவாயி. மகளுக்குச் சாதத்தைப் போட்டுத் துாங்க வைத்து விட்டு, அவளும் பேருக்கு பிடிசோற்றை அள்ளித் தட்டில் போட்டுக்கொண்டு சாப்பிடத் துவங்கும்போது, "அப்பா இன்னிக்கும் வீட்டுக்கு வர மாட்டாரா அம்மா?’ என்று கேட்டுக்கொண்டே அவளது நாலு வயதுக் குழந்தை மீனாகூதி அருகில் வந்து நின்றாள். -

நீே இன்னும் தூங்கலியாடா கண்ணா, போய்

படு. அப்பாரு வந்துருவாரு,’ என்று அவளைச் சமாதானம் பண்ணிப் படுக்கச் சொன்னாள்.