பக்கம்:மருதநில மங்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை69


‘வாடிய பூவொடுவாரல் எம்மனை’ என
ஊடி இருப்பேனாயின், நீடாது,
அச்சு ஆறாக உணரிய வருபவன் 20
பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

‘பகல்ஆண்டு அல்கினை பரத்த!’ என்றுயான்,
இகலி இருப்பேனாயின், தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும், 25

ஆங்க,
விருந்து எதிர்கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்,
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என்புலவி; தாங்காது

அவ்வவ் இடந்தான் அவை அவை காணப் 30
பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி! கடன் நமக்கு எனவே.”

‘பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை விடாதே ஏற்றுக் கொள்கின்றாய்; அதை நான் பொறேன்!’ எனத் தோழி கூறத் தலைவி அதற்குக் காரணம் கூறியது. இது.

1. ஆர்–நிறைந்த, செறு–வயல்; 2. கொண்மார்–கொண்டு வருதற் பொருட்டு, 3. இழை–ஈண்டுச் சிலம்பு; 4. ஓரை மகளிர்–விளையாட்டுப் பெண்கள்; ஓதை– ஆரவாரம்; வெரீஇ–அஞ்சி; 5. ஆர்கை–உண்ணும் தொழில் மேற்கொண்ட; அம்சிறைத் தொழுதி–அழகிய இறகுகளை உடைய நாரைக் கூட்டம்; 6. பொங்கர்–சோலை; 7. அலப்பிய–அலைத்த; 10. வெய்யன்–விருப்பம் உடையன்; 11. வதுவை நாள்–திருமண நாள்; நாள்தோறும் திருமணநாளே ஆயினன் என்க. 13. உறுவோய்–துன்புறுவோய்; 14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/71&oldid=1129860" இலிருந்து மீள்விக்கப்பட்டது