பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





லூயி பாஸ்டியர்
(1822 - 1892)


5



பட்டுப் பூச்சி நோய்க் கிருமிகளை அழித்தார்

உலக வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு மிகச் சிறந்த, ஒரு குறிப்பிடத்தக்க நூற்றாண்டாகும். அந்த நூற்றாண்டில், பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில், பல்வேறு பெருமைமிக்கப் பெரியார்கள், அறிஞர்கள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் தோன்றி, உலகுக்குப் புதுப் புது புதுமைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள்.

புவி வாழ்வில் மகத்தான் மாறுதல்களை உருவாக்கி, மனித இனத்திலே மறுமலர்ச்சி எண்ணங்களைப் புகுத்திப் பெருமை பெற்ற நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு.

அந்த நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தின் மணி மகுடமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது ஃபிரான்ஸ் நாடு. அந்த நாடு மற்ற நாடுகளின் பாராட்டுதலுக்கும், பின்பற்றுதலுக்கு உரிய வழிகாட்டும் நாடாகவும் விளங்கியது.