பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

127



ஏன் இவ்வாறு தனது பெயரை அவர் தலைகீழாக அச்சிட்டார்?

பூரணலிங்கம் என்று அச்சிட்டால் நேரடியாகக் கல்லூரியில் விற்க முடியாது, அட நம்ம பூரணலிங்கம் தானே என்ற அலட்சிய மனோபாவம் உருவாகி, இந்தக் கெய்டு இவ்வளவு மாணவர்கள் இடையே இருந்திராது; எல்லா எஃப்.ஏ. வகுப்பு பிரிவுகளும் வாங்கியிராது யாரோ ஒரு வெள்ளைக்காரர் எழுதிய கெய்டு இது என்ற பெயரைப் பெற்று, கல்லூரி பிரின்ஸ்பால் வரை விசாரணைக்குச் சென்று வியப்பை விளைவித்திருக்காது அல்லவா? என்று பதில் கூறினார் பூரணலிங்கம் கல்லூரி முதல்வர் மில்லரிடம்!

இது போல, சற்ற மாறாக, நமது லூயிக்குப் பள்ளித் தலைவரே மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கு மாறு பரிந்துரைத்தார் என்றால், லூயி பாஸ்டியர் திறமையை பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படி மதித்திருந்தால் மாணவர்களுக்குப் பாடம் போதிக்குமாறு கூறியிருந்திருப்பார்? யோசித்துப் பார்த்தால் லூயியின் அமோகத் திறமை புரியுமல்லவா?

தமிழர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்ற எஃப்.ஏ. மாணவர் ஏழைமையானவர்; அதனால், அவரது அற்புத ஆங்கிலப் புலமையை நேரடியாகக் கூற முடியாமல், தனது பெயரையே தலைகீழாக மாற்றி, யாரோ ஓர் ஆங்கிலேயன் எழுதும் மொழி நடையிலே எழுதிக் கல்லூரி மாணவர்களிடையே விற்று, அது பிரின்ஸ்பால் விசாரணை வரை அகன்று உண்மை புலப்பட்டது. திரு, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையின், ஆங்கில விரிவுரை, அற்புதமான ஆங்கிலேயர் நயத் தோடமைந்த மொழிப் புலமையோடு இருந்ததால், மேக்னிலான் ரூப் என்பவர் தப்பினார்! இல்லையா?

ஆனால், லூயி பாஸ்டியரை மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி பெசன்கான் நகர் பள்ளித் தலைமையாசிரியர் நேரிடையாகக் கூறியதோடு நிற்கவில்லை.

லூயி பாஸ்டியர் ஏழ்மையானவர் என்பதை உணர்ந்த அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர். அவருக்குரிய உணவு,