பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

163


குலத்திலே ஆதி நாள் முதல் வேரூன்றி விட்டதால் தான் - பாம்பு என்றதும் பயந்து சாகிறோம்!

நாயை நமது வீட்டிலே கண்டால் நாம் அஞ்சுகிறோமா? இல்லையே! மாறாக, அதனிடமே கொஞ்சுகிறோம்; விளையாடுகிறோம்! நம்மோடு உறங்கவும் வைத்துக் கொள்கிறோம்! அந்த நாயை ஆயிரக்கணக்கான ரூபாயைக் கொடுத்து விலைக்கு வாங்கி, அதற்கு புலால், ரொட்டி, பிஸ்கட், பால் சோறு, பால் போன்றவற்றை உணவாகக் கொடுத்து உறங்க வைக்கிறோம்!

பணக்காரன் வளர்க்கும் நாய் என்றாலே அதற்குத் தனி மரியாதை உருவாகின்றது. சங்கிலியால் அதைக் கட்டி இழுத்துக் கொண்டு அதனோடு தெருதோறும் அலைகிறான்! அதை சோபா, மெத்தை, திண்டு, நாற்காலி, கட்டிலிலியே படுக்க வைத்து அழகு பார்க்கிறான்.

என்ன காரணம் இதற்கு? நாகப் பாம்புவிடம் நஞ்சு உள்ளது? நாயிடம் விஷமில்லை. அதற்கு மரியாதை பணக்காரனிடம்?

அந்த மரியாதையை அவன் ஏன் நாய்க்குத் தருகிறான் தெரியுமா? அவனது பணப் பெட்டியை எவனாவது திருட வந்தால், இந்த நாய் அவனைக் குரைத்து விரட்டி விடும் என்ற ஒரு சுயநல பணப் பாதுகாப்புப் பண்புதான்! ஆனால், நாயிடமும்,கொடிய விஷமிருக்கிறது! ஆம்! வெறிபிடித்த நாயிடம், ஏன் உடலெல்லாம் சொறி சிரங்கு பிடித்த நாயிடம் கூட விஷமிருப்பதாக “The Dog” என்ற நூல் கூறுகின்றது.

வெறி நாய் கடித்தால், கடிபட்டவனுடைய தொப்பூழைச் சுற்றி பதினான்கு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் நாயைக் கண்டு இன்று பயப்படுகிறான் இன்றும் அந்த பயம் மனிதனிடம் இருக்கிறது. அதுமட்டுமன்று கடித்த நாய் வீட்டு நாயா? ரோட்டு நாயா? என்றும் கேட்டு விட்டு, கடித்த நாய் செத்துவிடப் போகிறது. பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருங்கள் - நாய்க்கடி சுகமாகும் வரை என்றும் அறிவுரை கூறிப் பயப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.