பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மருத்துவ விஞ்ஞானிகள்


முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டுவரும் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சிப் பணிகளே ஆகும்.

லூயி பாஸ்டியர் இவ்வளவு செயற்கரிய செயல்களைச் செய்யக் கடுமையாக உழைத்தார். அதனால், அவர் ஒயா உழைப்பில் ஈடுபட்டார். நாளுக்கு நாள் உடல் வலிமை குன்றியது. ஒய்வு தேவை என்று லூயி பாஸ்டியருக்கு மருத்துவர்கள் அப்போது வற்புறுத்தினார்கள்.

லூயி பாஸ்டியர் மனைவி மரீ என்ற மாதரசி, கணவனது உழைப்பை எவ்வளவோ குறைத்துக் கொண்டுதான் வந்தார். மனைவி சொல்லைத் தட்டாமல், லூயி ஓய்வெடுத்துக் கொண்டு தான் வந்தார்.

ஆனால், தனது பெயரால் நிறுவப்பட்டு வந்த பாஸ்டியர் நிறுவனங்களுக்கு அவ்வப்போது அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகளை அறிவியல் தான்மாக வழங்கிக் கொண்டும் இருந்தார்.

லூயி, தான் நிறுவிய ஆய்வு நிறுவனங்கள் ஆற்றும் நோய் எதிர்ப்பு ஆய்வுகளைக் கண்காணித்தும் வந்தார். நண்பர்களுடன் உரையாடி, மேற்கொண்டு என்னென்ன ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் திட்டங்கள் வகுத்தார்.

பாஸ்டியர் நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கண்டு அவர்களுக்குரிய அறிவுரைகளை வழங்கினார். மக்களுக்கு எப்படியெல்லாம் நோய் குறைப்புச் சேவைகளை ஆற்றலாம் என்பதற்கான வழி வகைகளை பாஸ்டியர் வகுத்துக் கொடுத்து வந்தார்.

‘இளைஞர்களே! எதிர்கால டாக்டர்களே! எதற்கும் பயம் கொள்ளாதீர்! எந்தவொரு செயலையும் துணிவாகச் செய்திடும் மனவுறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்! இன்று வரை மனித குலத்துக்காக என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதைத் தினந்தோறும் சிந்தனை செய்து பாருங்கள்! நீங்களும் ஒரு லூயி பாஸ்டியராவீர்கள். அதனால் மனித குலம்