பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மருத்துவ விஞ்ஞானிகள்



அவருக்குப் பிறகு வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ விஞ்ஞானிதான், இரத்தக் குழாய்களில் காற்று இல்லை; ரத்தம் மட்டும் இருப்பதாகக் கண்டுபிடித்தார்.

‘இதயத்தின் வலது பக்கத்திலிருந்து சிறு துவராங்கள் மூலம் இதயத்தின் இடது பக்கத்துக்கு ரத்தம் பாய்ந்து, அது அங்கு காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகின்றது என்றார். பிற்காலத்தில் அவருடைய ஆராய்ச்சியும் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

இரத்தத்தில் காற்று கலந்தால், காற்றுக் கட்டி உண்டாகி, அது உயிரையே கொன்றுவிடும் என்று அப்போது உணரப்பட வில்லை.

அந்தக் காலக் கட்டத்தில் மருத்துவம், விஞ்ஞானம், அரசியல் எல்லாவற்றையும் கிறித்துவ தேவாலயங்கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்ததால், மனித உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உரிமை எந்த மருத்துவ விஞ்ஞானிக்கும் வழங்கப்படவில்லை.

லியோ டாவின்சி ; இதய ஒவியம்!

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகுதான், இதயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உரிமையும், அதில் உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் உரிமை, ஆராய்ச்சி செய்யும் தகுதி எல்லாம் இந்த நூற்றாண்டில் தான் உண்டானது.

இந்த நிலையில், மனிதன் இதயத்தைப் பற்றித் தெளிவாக ஒரு வரைபடம் எழுதி உலகுக்குக் கொடுத்தவர் உலகப் புகழ் பெற்ற லியோ டாவின்சி என்பவர் ஆவார். ஆனால், அவர் ஒரு மருத்துவ விஞ்ஞானி அல்லர்.

இதயம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை ஒவியம் மூலம் வரைந்து காட்டியவர் ஓவியர் மேதை டாவின்சி தான். அன்று முதல் இதயம் ஒரு வரலாற்றுப் புதையல்போல மருத்துவ உலகுக்குப் பயன்பட்டது.