பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மருத்துவ விஞ்ஞானிகள்



கொஞ்சம் கற்பனைக் கண்ணோட்டத்தோடு இந்தக் காட்சியைச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றின் கொடுமைகள், கோரங்கள், கொடுரங்கள், துள்ளல் - துடிப்புகள் உயிரீனும் காட்சிகளாகத் தெரியும். ஆனால், ஐய்யோ என்று அலறி விடாதீர்கள்!

அரை குறை நோயாளிகள் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றாலே போதும். ஐயோ அறுவையே வேண்டாம் என்று எழுந்து அலறி ஓடி விடுவார்கள் - நோயாளிகள்!

கொஞ்சம் நல்வினை புரிந்தவன் ஆப்பரேஷனுக்குப் பிறகு சாவான்; தீவினைகள் செய்தவன் பதை பதைத்துக் கண்ணிர் விட்டுக் கதறி அலறி அறுவை அறுப்பது நடக்கும் போதே சாவான் இதற்குப் பெயர்தான் “ஆப்பரேஷன் சக்சஸ் பேஷண்ட் அவுட்” என்ற அறுவை கவுரமாகும்.

தான் தருமங்கள் செய்தவர்கள், அறநெறிகளோடு வாழ் பவர்கள். தெய்வ அருள் பெற்றவர்கள்தான், நாவிதர் அறுவைக்குப் பிறகும் உயிர் வாழ்வார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால், பிரசவித்த பெண்ணை எவ்வாறு மறு பிறவி என்று மக்கள் வியப்பார்களோ, அதேபோல நாவிதன் அறுவை சிகிச்சையும் மறுபிறவிதான் நாவிதன் என்ன? டாக்டர்களின் தற்கால பெரிய அறுவை சிகிச்சைகளும் மறு பிறவிதானே!

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருபவர்களுக்காக, லிஸ்டர் காலத்துக்கு முன்பு - தனியான உடைகள் கிடையாது; கருவிகள் எல்லாமே தூய்மையாக, சுத்தமாக இருக்கிறதா என்றும் பார்ப்பதில்லை. கசாப்புக் கடைக்காரன் இதை எல்லாம் பார்த்தா கடாக்களை வெட்டினான் - அக் காலத்தில்?

எனவே, அக்கால மருத்துவர்கள் கை கழுவிக் கொண்டு அறுவையில் இறங்குவதும் இல்லை; கத்தி போன்ற மற்ற கருவிகளைச் சுத்தமாகக் கழுவியதற்குப் பின்பு அறுவையைப் பயன்படுத்துவதும் இல்லை.