பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

47




அறுவை செய்வோர் ஆடைகளிலே எவ்வளவு அதிகமான ரத்தக் கறைகள் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கும் அவன் திறமையாளன் என்று பாராட்டப்பட்டக் காலம் அது. ஒவ்வொரு ரத்தக் கறையும் அவன் பெற்ற அறுவைப் பரிசாகவே நினைத்த நேரம் அது.

மேற்கண்ட கொடுமை அறுவைகளை, கோர அறுவைக் கொலைகளை,கொடூர ஆப்பரேஷன் வேதனைகளை, துள்ளத் துடிக்க அறுக்கும் மனித உறுப்புகளின் துயரங்களிலே இருந்து கடவுள் போலக் காப்பாற்றிய கருணையாளர்தான்், புதிய - புதுமைகளைப் புகுத்தி மனித இனத்தை மீட்டவர்தான்் - ஜோசப் லிஸ்டர் என்ற தெய்வத் தொண்டர்:

இந்த அருள் மேதையை, கருணை மிக்கவரை: எல்லா உயிர்களிடமும் அன்பைக் காண விரும்பிய இரக்கமுள்ள ஞானியை - நாம் என்ன சொல்லிப் புகழ்வது? எப்படிப் பாராட்டுவது? எவ்வாறு ஏற்றிப் போற்றி வழிபடுவதோ, நமக்கு புரியவில்லை!

“ஆண்டி செப்டிக் சர்ஜரி” அறுவை முறை சிகிச்சையில் புகழ் பெற்றார்!

ஜோசப் லிஸ்டர், ஆண்டி செப்டிக் சர்ஜரி என்ற நச்சுத் தடை அறுவை சிகிச்சையை முறையைக் கண்டுபிடித்தார்.

ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் அதனால் எந்த வித ஆபத்துக்களும் இல்லாமல் காப்பாற்றப்பட்டு வந்ததைக் கண்டு மருத்துவ உலகம் வியப்படைந்து பாராட்டியது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் லிஸ்டருக்கு பாராட்டு

இதற்கிடையில் லிஸ்டர் லண்டனில் உள்ள கிளாஸ்கோ நகர் சென்று, அங்குள்ள மருத்துவ மனைகளைச் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டர்.