பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வப் பயன்களைத் தெரிவிக்கின்றன. இந்நூலைப் படித்துப் பின்பற்றப்படும் மருத்துவத்திற்கு நம் முன்னோர்களே பொறுப்பாவார்கள்.

அடியேனுக்குத் தமிழ் மருத்துவம் அவ்வளவாகப் போதாதெனினும், என் அப்பாவும் அம்மாவும் சிறந்த தமிழ் மருத்துவர்களாகத் திகழ்ந்தனர். என் தாயின் அண்ணனும் அப்பாவும் தலை சிறந்த-வழி வழி (பரம்பரை) மருத்துவர்கள். அதனால், என் அன்னைக்குத் தமிழ் மருத்துவம் தெரியும். என் தந்தையாரும் சிறந்த தமிழ் மருத்துவர்; எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பல மூலிகை களை வளர்த்து வந்தார்கள். என் பெற்றோர்களின் ஏவலின்படி, யான் மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து, கியாழம் வைப்பதற்காகப் பிணியாளர்க்குத் தருவேன். கியாழ மருத்துவமே மிகுதியாயிருக்கும். செய்து கொடுக்கும் மருந்து மருத்துவம் அதனினும் குறைவாகவே இருக்கும். இதற்கு மட்டும் ஒரு சிறிது பணம் பெறப்படும். இந்தத் தொடர்பினால் அடியேன் இந்நூலை எழுதத் துணிந்தேன். - தன்னினம் முடித்தல்

இந்நூலில் சிறுபான்மைப் பெயர்கள் மருத்துவத் தொடர்பு இல்லாதனவாகும். இருப்பினும், 'ஒன்றினம் முடித்தல்-தன்னினம் முடித்தல் என்ற இலக்கண முறை யில், மருத்துவத் தொடர்புள்ள பெரும்பான்மையான வற்றுடன் அந்தத் தொடர்பில்லாத சிறுபான்மையனவும் பெயர்க் காரண விளக்கம் செய்யப்பெற்றுள்ளன.

இந்நூல், படிப்பவர்க்கு ஒரளவேனும் கைம் மருத்துவ மாகப் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலுக்குத் தக்க ஆதரவு அளிக்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன். இந்நூலை நன் முறையில் அச்சிட்டு உதவிய சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கு மிக்க நன்றி செலுத்து கிறேன்.

சுநதர சணமுகன, 29–9–1989.