பல்வேறு நூல்களிலிருந்து
ஆறுமணிப்பூ = மாலையில் ஆறு மணி அளவில் மலரும் ஒருவகைப் பூடுப் பூ, காலம். இது, சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் கூறப்பட்டுள்ளது.
இரும்பிலி = இரும்பைத் தங்கமாக்கும் செடி யிது. பண்பு-செயல் (த.பே.அ.)
பிடுங்கு கீரை = முளைக்கீரையைப் பறிப்பதோ - கொய்வதோ - இணுக்குவதோ - ஒடிப்பதோ இல்லை. முளைக்கீரை மண்ணிலிருந்து பிடுங்கப்படுவதால் பிடுங்கு
கீரை எனப்பட்டது. சார்பு. (த.பே.அ.)
y பூப்படை - பூப் பலி - பூ மடை = மலர் வழி
பாடாகிய அர்ச்சனைக்கு உரிய பூ வகைகள் எல்லாம் இப் பெயர்கள் பெறும். படை - பலி - மடை என்பன ஒரு பொருளனவே. இ.சா.:
சிலம்பு: 28 - 231, 232: ' பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து’ -
சீவக சிந்தாமணி:
" வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலம்
கொண்டு சூழ்ந் தெழுமுறை யிறைஞ்சி' - (3052)
அர்ச்சனை என்னும் வடமொழிச் சொல்லுக்கு நேரான பூப்படை, பூமடை என்னும் சொற்கள் உள்ளமை காண்க. (த.பே.அ.)