உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

- மறவர் சீமை

பாஞ்சாலங்குறிச்சியார். எஞ்சிய ஐம்பது பேர் சாயல்குடி பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கமுதிக்குச் சென்றனர். கமுதிப் பேட்டை கொள்ளையிடப்பட்டது. அடுத்த இலக்கு கமுதி கோட்டையா? அல்லது அபிராமமா?

அபிராமம் முஸ்லிம் மக்கள் மிகுதியாக உள்ள ஊர். அந்த ஊர் அம்பலக்காரர் காதர் மீரான் என்பவர். இவர் சிவகெங்கைச் சீமையில் இருந்து அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற கிருதுமால் ஆற்றின் கால்கள் சிவகெங்கைக்காரர்களால் அடைக்கப்பட்டதை இராமநாதபுரம் கலெக்டருக்குப் புகார் கொடுத்து இருப்பதால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்பது சின்னமருது சேர்வைக்காரரின் உத்திரவு. ஆதலால், அந்த அணி காதர்மீரான் அம்பலக்காரரைத் தேடிப்பிடித்துக்கொண்டு வந்தது. பிரதானி சின்னமருது சேர்வைக்காரரது உத்திரவை நிறைவேற்றுவதற்காக அம்பலக்காரரை அபிராமம் கண்மாய் கரையில் நின்ற ஒரு வேப்ப மரத்தோடு பிணைத்துக் கட்டினர். அந்த அணியினர். அடுத்து அவரைச் சுடுவதற்கு தங்கள் துப்பாக்கியில் கரு மருந்தைப் போட்டு அடைத்து ஆயத்தமானார்கள்.

அங்கு குதிரையில் வந்த சித்திரங்குடி சேர்வைக்காரர் அம்பலக்காரரை உற்று நோக்கினார். அம்பலக்காரரோ ஐயனார் கோவிலில் பலியிடுவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள ஆட்டுக்கிடா போல பீதியுடன் விழித்துக் கொண்டிருந்தார். சேர்வைக்காரர் அம்பலக்காரரிடம் ஓரிரண்டு கேள்விகள் கேட்டார். அதற்கு அவர் அமைதியாகப் பதில் சொன்னார். அதில் இருந்து அவர் மக்கள் கிளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல என்பது புரிந்ததுடன், அபிராமம் கண்மாய் ஆயக்கட்டில் நூற்றுக்கணக்கான குறுக்கம் நிலத்தில் நீர் இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கும் நெல் பயிரைக் காப்பாற்றும் முயற்சியில் கிருதுமால் ஆற்றுக்காலை திறப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கலெக்டருக்கு மனுச் செய்தது எந்த வகையிலும் சிவகெங்கைப் பிரதானி சின்ன மருதுவுக்கு எதிரானது அல்ல என்றும்