பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

23

வர்களுடன் கலந்துறவாட, அல்லது அதன் மூலம் வேறு பல உதவிகளைப் பெற விளையாட்டில் கலந்து கொள் வதும் உண்டு.


இன்றும், நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாகப் பொழுதைப் போக்குவதற்காக வருபவர்கள், நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.


இவர்கள் நோக்கம் எல்லாம் விளையாட்டில் நிறைய திறன் நுணுக்கங்களைப் பெற வேண்டும் என்பதோ, வெற்றியே பெற வேண்டும், தோற்றால் என்ன செய்ய வேண்டும் என்பதோ அல்ல. இவர்களுக்கு விளையாட்டு என்பது ஒரு முக்கியமான, முதன்மையான நோக்கமும் அல்ல. அவர்களுக்கு வேடிக்கை, கேளிக்கை, சிரிப்பு, பொழுது போக்கு ஆட்களின் நட்பு. அதன் மூலம் அனு கூலங்கள், ஆதாயங்கள், இவைகள் தான் முக்கியம்.


பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர், கேரம், கோல்ப் போன்ற வேறு பல ஆட்டங்களை ஆடுபவர்கள் பலர். இப்படி ஒரு வகையான மகிழ்ச்சி செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.


3. துன்பத்தில் துவளாத தன்னம்பிக்கைக்காக!


இந்திய நாட்டில் இருக்கின்ற துறவிகளில் சிலர், முள் படுக்கையில் படுத்துக் கிடந்ததாக நாம் கேள்விப் பட்டிருக் கிறோம். அவர்கள் தங்கள் தேகத்தை வருத்தி, இன்பம்


காண்பவர்களாவார்கள்.


அதாவது உடலை அடக்கி, தங்கள் கட்டுப்பாட்டுக் குள் வைத்து, வருத்தி வேலை வாங்கி, அதன் மூலம் தங்களுடைய ஆற்றலை அனைவருக்கும் வெளிப்படுத்திக் காட்டி மகிழ்கின்ற குணமுள்ளவர்கள்.