பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விளையாட்டு வினையாகிறது!


- - -


-*. * * - ==


மனித வாழ்வில் மலர்ச்சிகள்


வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்தே, மனித வாழ்க்கையில் விளையாட்டு வடிவம் பெற்றுக் கொண்டிருக் கிறது. ஆதிகால மனிதனது வாழ்க்கையின் ஆரம்பமே, இயற்கைச் சூழ்நிலையில் எழுந்த இடர்ப்பாட்டிலும், எதிர் நீச்சலிலுமே நீக்கமற நிரவிக் கிடந்திருக்கின்றன.


ஆதிகால மனிதனுக்கு வேலை என்ன, விளையாட்டு


என்ன என்ற வேற்றுமை தெரியாதவாறு, அவனுடைய


வாழ்க்கை முறை அமைந்திருந்தது, அவனது உள் உணர்வு களே அவனை உந்தி இயக்கிக் காத்தன.


உலகத்தில் மாறி மாறி வந்த இயற்கைப் பருவங்களின் மாற்றங்கள், அவனுடைய உணர்வுகளுக்கு உணவாகி, அவ னது அறியாமையை அகற்றி, விழிப்பூட்டும் அனுபவங்களாக மலர்ந்து வழிகாட்டி, வாழும் வகையை உணர்த்தின.


அறிவூட்டிய அனுபவங்கள்


உட்காரவோ உறங்கவோ ஒர் இடமில்லாமலும், உடுத் திக் கொள்ளவோ மானம் காக்கவோ உடைகள் இல்லா