பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து இடக்கும் மனித சக்தி 5.3 ...


மலும்; உண்டு மகிழவோ உடலை TiG உணவுகள் இடைக்காமலும்: விலங்கோடு விலங்குகளாக, மனிதன் ஆவிளங்காமல் வாழ்ந்த காலத்தில், பசியுணர்வு அவனை , , டாய் படுந்திய போது, காய்களை, கணிகளை, கிழங்கு தளை, இலைகளை, தழைகளைத் தின்றான்.


மழையும் வெயிலும், பனியும் குளிரும், அவனுக்கு புரியாத புதிர்களாய் இருந்தது போலவே, உணவுக்காக அலைந்த விலங்குகளின் வேட்டைக்களமாகவும் அவனது வாழ்க்கை அமைந்த போது, பய உணர்வு காரணமாக அவன் மரப்பொந்துகளிலும் புதர்களிலும், மரக்கிளை களிலும் பதுங்கித் தன்னைக் காத்துக் கொண்டான்.


ஆதிகால மனித வாழ்க்கை, அயராத அழியாதப் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அதாவது, வெறிகொண்டலைந்த விலங்கினத்திலிருந்து, தங்களைக் காத்துக் கொள்கின்ற விவேகமில்லாத நடைமுறைகளிலே தான், அன்றைய மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான்.


மாறிவந்த காலங்கள், மனிதனது அறியாமையையும் மாற்றிக்கொண்டே வந்து, அறிவு பூர்வமான அனுபவங் களையும் அவ்வப்போது அளித்துக்கொண்டே வந்தன.


அறிவுள்ள மிருகம்


தாவிப் பாய்ந்த மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள, அன்றைய மனிதர்கள் ஒடினார்கள். அப்பொழுது தப்பித்துக் கொண்ட அனுபவத்தால், தங்கள் சந்ததியின ரையும் தயார் செய்து கொள்ள முனைந்த பழக்கமே, கூட்ட மாக ஒடிப் பழகிய வழக்கமே, இந்நாளைய ஒட்டப் பந்தயங் களாக மாறி வந்திருக்கின்றன.