பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மலருக்கு மது ஊட்டிய வண்டு

22 மலருக்கு மது ஊட் டிய வண்டு

டேவிட் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்

பட்டான்.

கல்யாணி அம்மாளுக்கு அன்று சமையலில் யுத்தியே லயிக்கவில்லை. எப்படியும் இன்று சோபியாவையும் பாபுவையும் பற்றி தன் மத்திலுள்ளதைக் கண வரிடம் கேட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது கணவரே அடுக்களைக்கு வந்ததும் கல்யாணி அம்மாளுக்குக் கையும் காலும் ஒடவில்லை! சாதாரண மாக அங்கு அவர் வரக்கூடியவரல்ல .

“என்ன வேண்டும்?' என்று கேட்கக் கூடத் தோன் றாமல் அவள் தவித்துக் கொண்டிருந்தபோது பாகவதரே பேச்சை ஆரம்பித்தார் . "உன் கிட்டே தனியா ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அபிப்பிராயம் கேக்க ணும்னு யோசிச்சிண்டே இருக்கேன். இன்னிக்குத்தான் அதுக்குச் சமயம் வாய்த்தது.'

  • சொல்லுங்கோ!'

எப்படிச் சொல்றதுன்னுதான் புரியலே. நான் சொல்றது உனக்குப் புரியலேன்னா-அதாவது - பிடிக்கல் லேன்னா, ஒரேயடியா மறுத்திடுவியோ?”

கல்யாணி அம்மாளுக்குப் புரிந்துவிட்டது. அவரும் தன்னைப் போலவே ஒன்றை மனத்தில் வைத்துக்கொண்டு தான் சுற்றி வளைக்கிறார் என்று. ஆனாலும் அது அவர் வாயாலேயே வரட்டுமே என்றுதான் காத்திருந்தான்.

டேவிட் போயிட்டான்; இனி சோபியாவும் ஊருக்குப் போயிட்டா, என்னாலே அந்தப் பிரிவைத் தாங்கவே முடியாது போலிருக்கு.’’

"அதுக்கு, நாம என்ன செய்ய முடியும்? வித்தை கத்துக்க வந்தவா எத்தனை நாளைக்குத்தான் சொத்த