பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மலருக்கு மது ஊட்டிய வண்டு

32 மலருக்கு மது ஊட்டிய வண்டு

"என்ன உத்தேசம் ? பணம் கட்டி ஊருக்குப் போறியா, இல்லே இங்கேயே இறக்கி விட்டுடவா.’’

"எங்கிட்டே உண்மையிலேயே கட்டப் பணம் இல்லே...'-தயங்கித் தயங்கிக் கூறினாள் அவள்.

"அப்போ இங்கே ஸ்டேஷன்லே ஒப்பிச்சிடவா?’’

அவள் பதறிப் போனாள். அந்தக் கேள்வியின் பயங் கரம் தாளாமல், மானைப்போல் மருண்டுபோன அவளது விழிகளின் அழகை, அந்த மங்கலான ஸ்டேஷன் விளக்கு ஒளியிலும் அவனால் கண்டு ரசிக்க முடிந்தது.

குரல் அடைக்க அவள் கூறினாள்: ""நாளைக்குக் காலமே ஊருக்குப் போகலேன்னா. எங்கம்மா பிணத் தைக்கூட என்னாலேப் பார்க்க முடியாது.-நீங்க என்ன சொன்னாலும், கேக்கறேன்-என்னெ இறக்கி மட்டும்

விட்டுடாதீங்க... - அவள் கெஞ்சினாள்.

அவன் தீர்க்கமாக ஒரு முறை அவளைப் பார்த்தான். நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்-அவளுடைய

இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அந்த இளம் டி.டி.இ. யின் செவிகளில் முழங்கிக் கொண்டே யிருந்தன.

வண் டி புறப்படுவதற்கான இரண்டாவது மணியும் அடித்து விட்டார்கள். காலத்தின் அவசரம் திடீரென்று டி. டி இ.யைத் தாக்கியது. கைக்கெட்டிய தீங்கனியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒருவித பரபரப்பு அவனைத் துரத் தியது. 'சட் டெ ன்று ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல்,

சரி, வா என் பின்னாலே’ என்று அவன் வேகமாக முன்னே நடந்தான். எஞ்சினுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு முதல் வகுப்புப் பெட்டியைத் திறந்து விட்டான். அவள் அதனுள் பாய்ந்து ஏறிக் கொண்டாள்.

- அரக்கோணத்தில் சந்திப்போம்” என்று பெட்டியை வெளியே பூட்டிக் கொண்டு, வேறொரு கூட்டமான