பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மலருக்கு மது ஊட்டிய வண்டு

40 மலருக்கு மது ஊட்டிய வண்டு

வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனை நெருங்கிக் கொண் டிருந்தது.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சுழலும் மின்விசிறியின் காற்றசைவில், கலைந்து போன அவளது முன் கேச மயிர்கள் நிலை கொள்ளாமல், நெற்றியில் வந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன. பார்க்கப் பார்க்க அவனுள் ஒரு வித ஆவேச வெறி மூண்டது.

- என்னை வாரி அனைத்துக் கொள்ளேன்- என்று அந்தப் பொன்னுடல் அவனிடம் கெஞ்சித் துவள்வது போலிருந்தது. அந்த இளம் டி.டி.இ. "பொசுக்கென்று விளக்கை அணைத்து விட்டான். அந்த முதல் வகுப்பு கம்ப்பார்ட்மெண்ட், இருளில் மூழ்கியது.

டொக்... டொக்"

பெஞ்சியின் மேல் பென்சிலால் தட்டுகிற ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தாள் அவள்.

"சட்டென்று மீண்டுமொரு முறை கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். அவளால் வியப்பை அடக்கவே முடியவில்லை.

பொழுது நன்றாக விடிந்து, உதயசூரியனின் காலைக் கதிர்கள், அந்தக் கம்ப்பார்ட்மெண்டுக்குள் பாய்ந்து, ஒளி யைப் பரப்பிக் கொண்டிருந்தன. அத்துடன் முற்றிலும் அந்நியரான ஒரு புது டி.டி.இ. அவள் முன்னால் தின் து கொண்டிருந்தார். அவள் ஒரு கணம் பதறிப் போனாள். ஆனால் அவரோ

“எக்ஸ்க்யூஸ் மி மாடம்.ஐ ஆம் ஸோ ஸாரி. காற் றிலே டிக்கெட் பறந்து கீழே விழுந்திருக்கு' என்று கீழே