பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மலருக்கு மது ஊட்டிய வண்டு

54 மலருக்கு மது ஊட்டிய வண்டு'

நீங்கள் எனக்குச் சத்தியம் செய்து தர வேண்டும். என்பtது உங்களுக்கு இருக்கும் அன்பு காரணமாக உங்களிடம் இந்த உதவியை யாசிக்கிறேன்.'

  • என்ன சத்தியமா?’’ காசிராஜனது நாக்குக் குழறியது.

"ஆமாம், நம்முடைய இந்த விஷயம் எந்தக் காலத் திலும் அம்மாவின் செவிக்கு எட்டவே கூடாது.'

“நிச்சயம் முடியாது. அப்படி ஒரு பொய்யான சத்தியத்துக்கு நான் உடன்படவே மாட்டேன். என் பொருட்டு நீ வாங்குகிற ஏச்சையும் பேச்சையும் பார்த்துக் கொண்டிருக்க என்னால் ஆகாது. என் குறையையும் உன் குறையின்மையையும் அம்மாவுக்குத் தெரியப்படுத்தினால் தான் என் மனதுக்கு ஆறுதல் கிட்டும். அப்போதுதான் சாந்தா, என் அம்மா உன்னை இந்த வீட்டில் அமைதி யோடு இருக்க விடுவாள்' என்று காசிராஜன் பேசிக் கொண்டிருந்த போதே சாந்தா அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டு கதறியே விட்டாள்,

'தயவு செய்து எனக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு அந்தக் காரியத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் அம்மாவிடம் பேச்சு வாங்குவது என்பது ஆதியிலிருந்தே எனக்குப் பழக்கமான ஒன்று. என்னை மலடு' என்று அம்மாவோ அல்லது ஊரே பழித்தாலும் எனக்கு இனி வருத்தம் ஏற்படாது. முன்னைவிடத் தெம்பாக, ஆத்மத் திருப்தியோடு அந்தப் பழிச்சொல்லை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதே சமயம், உங்களைப் பற்றி அப்படி யாராவது பேசினால், இல்லை-அந்த எண்ணத்தோடு பார்த்தால்கூட அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

"அது மட்டும் அல்ல, உங்களைப்பற்றின. இந்த உண்மை தெரிந்தால், அந்த அதிர்ச்சியே போதும், அது