பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தில் நாங்கள் நினைப்பதெல்லாம் வாயை விட்டுச் சொல்லிடுவான்; பணத்தைக் கீழே புதைத்துவிட்டுப் பையன் கையில் வரவழைப்பான்! (வித்தைக்காரன்) தரையிலுள்ள மண்ணை அள்ளிச் சர்க்க ரையாய்த் தந்திடுவான்; மறைந்து போன மோதிரத்தை வாழைப் பழத்தில் வரவழைப்பான்! (வித்தைக்காரன்) மாய வித்தை செய்திடுவான்; மந்திர வித்தை செய்திடுவான்; ஆயி ரம்பேர் வாய்பிளந்தே 'ஆஹா என்று கூறவைப்பான்! (வித்தைக்காரன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/105&oldid=859879" இலிருந்து மீள்விக்கப்பட்டது