பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவிக்குப் பலரை அழைத்தனராம் - தினம் ஊக்க முடனே உழைத்தனராம். அதனால், அடிபட்டு வீழ்ந்தவரில் - பல ஆயிரம் வீரர் பிழைத்தனராம். போர்க்களம் தன்னிலே கண்டவற்றை - அவர் புத்தக மாக எழுதினராம். பாரினில் உள்ள அறிஞரெலாம் - அதைப் படித்ததும் உள்ளம் உருகினராம். அண்ணனும் தம்பியும் போலஉலகினில் அத்தனை மக்களும் வாழ்ந்திடவே, எண்ணினர்; எழுதினர், பேசினர்; பிறருக்கு எடுத்துக்காட் டாக விளங்கினராம். சீரிய ரான அவர்தம் முயற்சியால் 'செஞ்சிலுவைச் சங்கம் தோன்றியதாம். நேரிய வழிகளில் பற்பல தொண்டுகள் நித்தம் அச்சங்கமே செய்திடுமாம். நோயின்றி வாழ்ந்திடச் செய்வதுவும் - பிறர் நோயுற்ற போதில் உதவுவதும் நேயமாய் உலகினில் வாழ்வதுவும் - துன்பம் நீக்கலும் முக்கிய கொள்கைகளாம். 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/140&oldid=859952" இலிருந்து மீள்விக்கப்பட்டது