பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழுத வயலில் அழகனும் உமியை விதைத்து வைத்தனன். முளையும் கிளம்ப வில்லையே; மூன்று மாதம் ஆனதே! உழுத வயலில் அரிசியை ஒடி ஒடி விதைத்தனன். முளையும் கிளம்ப வில்லையே; மூன்று மாதம் ஆனதே! உழுத வயலில் அரிசியும் உமியும் சேர்ந்த நெல்லையே அழகன் விதைத்து வைத்தனன். அதுவும் வீணாய்ப் போகுமோ? இல்லை, இல்லை. முளையுமே எழும்பி மேலே வந்தது. பல்லைக் காட்டி அழகனும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனன். 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/154&oldid=859977" இலிருந்து மீள்விக்கப்பட்டது