பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு மாத விடுமுறையும் இனிமை யாகக் கழிந்ததுவே. பள்ளிக் கூடம் திறந்ததுவே, பரீட்சை முடிவும் தெரிந்ததுவே. 'எட்டாம் வகுப்பைக் கடந்தோம்நாம். இனிமேல் பயமே இல்லையென எண்ணிக் கொண்டே வீடடைந்தேன், என்றும் இல்லா மகிழ்வுடனே. மறுநாள் பள்ளி செல்லுகையில், வழியில் உள்ள கடைதனிலே, கண்டேன், அழகிய புத்தகமே, காசைக் கொடுத்து வாங்கினனே. வாங்கிப் படித்துக் கொண்டேநான் மகிழ்வுடன் பள்ளி வந்தடைந்தேன். 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/164&oldid=859993" இலிருந்து மீள்விக்கப்பட்டது