பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில் உள்ள மிருகமெலாம் கூட்டம் ஒன்றைக் கூட்டினவாம். வேட்டைக் காரர் தொல்லைகளை விவர மாகப் பேசினவாம். "துப்பாக் கியினால் நம்மையெலாம் சுட்டுக் கொல்லும் மனிதர்களை இப்போ தேநாம் பழிவாங்க எழுந்திடுவோம்” எனப் புலிசொல்ல, "இப்படி வாயால் பேசிடுதல் எளிதே. ஆனால், மனிதர்களை எப்படிப் பழிநாம் வாங்குவதோ?” என்றே சிங்கம் கேட்டிடவே குள்ள நரியும் முன்வந்தே கூற லானது சபைதனிலே: "நல்ல யோசனை ஒன்றுண்டு. நான்இப் பொழுதே கூறிடுவேன். 175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/180&oldid=860012" இலிருந்து மீள்விக்கப்பட்டது