பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிப் படரக் கொம்பில் லாமல் முல்லைக் கொடியுமே - காற்றில் சுற்றிச் சுழன்று தவிக்கும் காட்சி கண்டு தானடி. தேரைக் கொடியின் அருகில் கொண்டு செல்வ தேனடி? - அங்கே சென்று கொடியைக் கையில் அவரும் எடுப்ப தேனடி? தேரின் மீது கொடியைப் படர விடுகி றாரடி - அதன் சிரமம் தீர்த்து மகிழ்ச்சி யோடு நடக்கி றாரடி முல்லை படரத் தேரைக் கொடுத்த வள்ளல் பாரிபோல் அடியே, மிகவும் நல்ல மனிதர் ஒருவர் உண்டோ? சொல்லடி. இல்லை, இல்லை. இல்லை என்றே சொல்கி றேனடி - நாம் எங்கு தேடிப் பார்த்திட் டாலும் கிடைத்தி டாரடி க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/203&oldid=860037" இலிருந்து மீள்விக்கப்பட்டது