பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை அழகினைக் கண்டுகண்டு - பெரும் இன்ப மடைந்திடும் ஒர்.அரசன் உயர்ந்த மலைகளைக் கண்டிடவே - மிக உல்லாச மாகக் கிளம்பினனே. மலைவளம் கண்டு வருகையிலே - அங்கு மடமட வென்று மழைபொழிய பலகிளை உள்ள மரத்தடியில் - சென்று பதுங்கினன் அந்த அரசனுமே. பயத்தால் உடலும் நடுங்குதல்போல் - குளிர் பரவிட மன்னன் நடுங்கினனே. உயர்ந்த மதிப்புள்ள போர்வையினால்-நன்றாய் உடம்பை இறுகவே மூடினனே. மேகங்கள் கூடிடக் கண்டதுமே - அங்கு வேகமாய் ஒர்மயில் ஓடிவந்தே, தோகை விரித்துநின் றாடியதே - மேலும் தொண்டையைத் தூக்கி அகவியதே! 201

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/206&oldid=860040" இலிருந்து மீள்விக்கப்பட்டது