பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொந்திக் கணபதி, வா வா வா வந்தே ஒருவரம் தா தா தா. கந்தனின் அண்ணா, வா வா வா. கனிவுடன் ஒருவரம் தா தா தா. ஆனை முகத்துடன் வா வா வா. அவசியம் ஒருவரம் தா தா தா. பானை வயிற்றுடன் வா வா வா. பணிந்தேன், ஒருவரம் தா தா தா. எல்லாம் அறிந்த கணபதியே, எவ்வரம் கேட்பேன், தெரியாதா? நல்லவன் என்னும் ஒருபெயரை நான்பெற நீவரம் தா தா தா. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/21&oldid=860044" இலிருந்து மீள்விக்கப்பட்டது