பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கன்றுக்குப் பால் விடாமல் கறக்கும் பட்டணத்துப் பால்காரர் ஒருவரைப் பார்த்து ஒரு சிறுவன் பாடுகிறான்). காலை மாலை வேளையிலே பால்காரரே - தினம் கன்றில் லாமல் பால்க றக்கும் பால்காரரே. பாலை யெல்லாம் கறந்துவிட்டுப் பால்காரரே - அதைப் பத்து மடங் காக்கி விற்கும் பால்காரரே. சொட்டுப் பாலும் விட்டிடாது பால்காரரே - கன்றைத் துடிது டிக்கச் செய்து விட்டீர், பால்காரரே. ஒட்டி உலர்ந்து கன்று.சாக, பால்காரரே நீரோ உரலைப் போலப் பருக்கிறீரே பால்காரரே! துள்ளி ஒடும் கன்றைக் கொன்று பால்காரரே - அதன் தோலி னாலே கன்று செய்தீர் பால்காரரே! கொள்ளை லாபம் அடிப்பதற்கோ பால்காரரே - இந்தக் கொடிய செயல் செய்துவிட்டீர் பால்காரரே? கொன்று விட்டீர் அருமைக் கன்றை, பால்காரரே-இன்னும் கொஞ்சம் கூட இரக்க மில்லை பால்காரரே. கன்றில்லாத பசுவை ஏய்த்துப் பால்காரரே நித்தம் கறந்து கறந்து விற்கிறீரே பால்காரரே 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/229&oldid=860065" இலிருந்து மீள்விக்கப்பட்டது