பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்களின் வாழ்த்தும் கருத்தும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை : பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளித்த செந்தமிழில் தேனார் கவிகள் செய்துதரும் வள்ளியப்பா ........... நாமக்கல் கவிஞர் : இனியபொருள் எளியபதம் இணைந்த வாகி இளைஞர்களின் மனங்கவரும் கவிகள் பாடி தனிமுறையில் தமிழ்த்தாய்க்குப் பெருமை கூட்டித் தகுதிமிக்கோர் புகழ்ந்தபல சான்று பெற்றோன் கொத்தமங்கலம் சுப்பு : - வள்ளியப் பாவின் பாமாலை - அது வளரும் தமிழுக்குப் பூமாலை அள்ளிக் குடிக்கும் நீரோடை - அது அழகுத் தமிழுக்குப் பொன்னாடை செளந்தரா கைலாசம் : - வையமே வியக்கும் வண்ணம் வள்ளியப் பா! உன் நெஞ்சுள் தெய்வமே குழந்தை யாகித் திருவிளை யாடல் ஒன்று செய்வமே என்று மெள்ளச் சேர்ந்ததோ. சிறுவர்க் காகப் பெய்வமே பாடல் என்று பெய்ததோ! உண்மை பேசு! ராஜாஜி : (மலரும் உள்ளம் இந்திய அரசினர் பரிசு பெற்றபோது வேறு யாரும் செய்யாத பணி, அந்தப் பணிக்குச் சரியாய் அமைந்தவர், செய்து 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/236&oldid=860073" இலிருந்து மீள்விக்கப்பட்டது