பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார். பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். இரவில் எல்லாம் சுற்றுவார். எலிகள் வேட்டை ஆடுவார். பரணில் ஏறிக் கொள்ளுவார். பகலில் அங்கே தூங்குவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். மெல்ல மெல்லச் செல்லுவார். மேலும் கீழும் தாவுவார். ளொள்ளொள் சத்தம் கேட்டதும் நொடியில் ஒடிப் பதுங்குவார். மியாவ் மியாவ் பூனையார். மீசைக் காரப் பூனையார். 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/31&oldid=860085" இலிருந்து மீள்விக்கப்பட்டது