பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே கொஞ்சம் தயவு செய்து நின்றிடுவீர் தவளையாரே. சுத்த மாகத் தினம்.குளித்தும் தவ்ளையாரே - உடல் சொறி சொறியாய் இருப்பதேனோ தவளையாரே? பூச்சி புழு பிடித்துவரும் தவளையாரே - உம்மைப் பிடித்துப் பாம்பு தின்பதேனோ? தவளையாரே. மாரிக் காலம் வந்து விட்டால் தவளையாரே - ஏனோ வறட்டுக் கத்தல் கத்துகிறீர் தவளையாரே? 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/54&oldid=860110" இலிருந்து மீள்விக்கப்பட்டது