பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் வீட்டில் ஒருகுதிரை எனக்கே சொந்தம் அக்குதிரை. தங்கம் போலே அதன்நிறமாம். சவாரி செய்ய உதவிடுமாம். கொள்ளும் புல்லும் கேட்காது; கொடுத்தால் கூடத் தின்னாது; பல்லைக் காட்டிக் கனைக்காது; பலமாய்க் காலால் உதைக்காது; சாட்டை கண்டு மிரளாது; தரையில் படுத்துப் புரளாது; காட்டுச் சிங்கம் வந்தாலும், கலங்கி ஓடி ஒளியாது. - சண்டித் தனங்கள் செய்யாது; தள்ளிக் கீழே வீழ்த்தாது; சண்டை வந்தால் அஞ்சாது; தலையைத் தொங்கப் போடாது. 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/77&oldid=860135" இலிருந்து மீள்விக்கப்பட்டது