பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திசொல் கேட்டிடுவாய் - அவர் காட்டும் வழிநடப்பாய். சாந்தமாய் வாழ்ந்திடுவாய் - என்றும் தருமமே காத்திடுவாய். மெய்ம்மையே பேசிடுவாய் - அதனால் மேன்மை அடைந்திடுவாய். கைராட்டை சுற்றிடுவாய் - நல்ல கதரை உடுத்திடுவாய். நாட்டிற் குழைத்திடுவாய் - என்றும் நன்மையே செய்திடுவாய். ஏட்டிலே கண்டஉண்மை - தன்னை ஏற்று நடந்திடுவாய். ஏழைக் கிரங்கிடுவாய் - அவர் இன்னல்கள் போக்கிடுவாய். வாழையைப் போலவேநீ - எல்லா வகையிலும் உதவிடுவாய். 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/84&oldid=860143" இலிருந்து மீள்விக்கப்பட்டது