பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 9

வெளிப் படுத்துகிறது. அரும்பு பக்குவப்படுத்தி வைத்திருந்த பருவ இன்பத் தேனைப் பாட்டு வண்டுக் காதலனுக்குப் படைத்து மகிழ்கிறது, காதல் அதன் கதவைத் தட்டும்போது! இனத்தைப் பெருக்கும் மகரந்தமும் ص- gubt Geir) ہوے. இதழ்ச் சிறைக்குள்தானே இளவேனிலை எதிர்பார்த்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது ! இத்தனை சிறப்புகளையும் தன் இதழுக்குள் மறைத்துக் கொண்டிருக்கிறது அரும்பு. அதுபோல் எத்தனையோ குறிப்புகளை ஏந்திழையார் புன்னகை தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் வள்ளுவர், புன்னகையை அரும்பென்றார்

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை * நகை மொக்குள் உள்ளதொன்று உண்டு. 1 2.74

  • நகை மொக்குள்' - எவ்வளவு கற்பனை நயத்தோடு கூடிய சொல்லாட்சி' - என்று சுவை மயக்கத்தோடு கூறி முடித்தான் அவன்,

அவள் அவன் கூறிய பாட்டைச் சுவைத்தாள்!

அவனுடைய பசுமையான அறிவாற்றலைச் சுவைத் தாள்!