பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அவன் காதற்கரும்பு மேனியைக் கட்டெறும்புக் கண்களை மேயவிட்டுச் சுவைத்தாள்.

இப்போது அவள் கண்கள் பேசின! கன்னங்கள் பேசின ! உதடுகள் ஒராயிரம் உணர்வுகளை நடுக்கத்தால், நாகரிகமாக வெளிப்படுத்தின ! காதலைக் கண்களால் இரக்கும் இராப் பிச்சைக்காரி ஆனாள் அவள். நாட்டிய வெண்புறா போன்ற அவள் நளின மலரடிகள் படுக்கை அறைநோக்கிப் படர்ந்தன. இன்று அவள் பெண்மை, பெண்களே விரும்பும் பேரழகு பெற்றது. அவள் கண்துதுக்குக் கட்டுப்பட்ட காதல் வெள்ளாடாய்ப் பின் தொடர்ந்தான் அவன், அப்போது அவன் வாய் இந்தத் திருக்குறள் தேனடையைப் பிழிந்து கொண்டே சென்றது. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு - 1280