பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கள்ளும் காமமும்

21-3-8 மாலை ஆறு மணி. அவன் அயலூர் சென்றிருந்ததால் அவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ள வில்லை; வீட்டைப் பூட்டி விட்டு அடுத்த வீட்டு அலர்மேல் மங்கையைப் பார்க்கச் சென்றாள். அவள் பள்ளித் தோழி: கல்லூரிக் காலத்தில் காதற் கனவுகளைப் பரிமாறிக் கொள்ளும் கட்டில் தோழி!

கையில் சிறிய வானொலிப் பெட்டியுடன் வீட்டு முற்றத் தில்!அமர்ந்திருந்தாள் அலர்மேலு. தமிழகச் சட்டமன்றத் தில் நாவலர் நெடுஞ்செழியன் அன்று வெளியிட்ட் நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பற்றி மாநிலச் செய்தி முழங்கிக் கொண்டிருந்தது.

"மரமேறிகள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் கள்ளிறக்கி விற்பனை செய்யப்படும்' என்ற செய்தி அலர்மேலுவின் நினைவில் நின்றது. ஏனென்றால் அவர்கள் தோப்பில் ஐத்தாறு தென்னை மரங்கள், கருவுற்ற பெண்களைப் போல் காய்க் குலைகளைத் தாங்கி நின்று கொண்டிருந்தன.

'அரசு அலுவலர்களுக்குத் தமிழக அரசு ஒரு பஞ்சப் படி உயர்வு அளித்திருக்கிறது என்ற செய்தி அவளுக்கு இனித்தது. ஏனென்றால் அவள் கணவன் அரசாங்க அலுவலர்.

'மதுவிலக்கைத் தமிழக அரசு தளர்த்தியிருப்பதுபற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டாள் அலர்மேலு.