பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

அது போன்ற வேளைகளில்இல்லத்தில் ஒருவித இறுக்கம் ஏற்படும். முகத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத ஒரு மேகமூட்டம் சூழ்ந்துகொள்ளும், எதனால் அவன் அப்படி இருக்கிறான்? வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் குழப்பமாக இருக்கலாம்? எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறியிருக்கலாம்? மேலதிகாரிகள்

மிரட்டியிருக்கலாம்? சுற்றியிருக்கும் உலகத்தின் சூடு தாங்காமல், தத்தையைப் போல் அவன் ஒட்டுக்குள் பதுங்கியிருக்கலாம். அப்பொழுதெல்லாம் ஆடவர்கள் அப்படித்தானே இருப்பார்கள். அவள்அமைதியாகத் தலைவாழைக் குருத்தை விரித்துப் போட்டாள். அந்த இலைகூட அன்று அவளிடம் ஒரம் க்ருண்டு சுருண்டு முரண்டு பிடித்தது. தண்ணீரைத் தெளித்து அன்போடு நீவிக் கொடுத்தாள். அப்போதும் அது பணியவில்லை.