இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
74
இல்லப் பணிகளை இரவில் முடித்து - கணவனைத் தன் பணிவிடையால் உறங்க வைத்துவிட்டு அதற்குப்பின் உறங்கும் உயர்ந்த பண்பினள்.
என்றாலும்
விடியலில் கணவன் எழுவதற்கு முன் எழும் பழக்க முடைய இல்லத்தரசி!
இத்தனை அரும்பண்புகள் அவளிடத்தில் பொருந்தி யிருந்தாலும், அவற்றையெல்லாம் முதலில் குறிப்பிடாமல் பாடலில் எடுத்தவுடன்,
- அடிசிற்கு இனியாளே!' என்றுதானே குறிப்பிட்டு வருந்துகிறார் வள்ளுவர்.
மனைவியின் இறப்பால் அவருக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு, இனிச்சுவையாகச் சமைத்துப்போட ஆளில்லை
என்பதுதானே. அதனால்தான் வள்ளுவரையும் சாப் பாட்டு ராமர்” என்றேன் நான்-என்று கூறினான் அவன்.
- இப்பாடலைப் பாடியவர் வள்ளுவர் இல்லை. திருவள்ளுவ நாயனார் என்ற சாப்பாட்டு ராமர்' என்று கூறிச் சரித்தாள் அவள்,
"என் நண்பன் ஒருவன் எம். எஸ். சி., பட்டம் பெற்ற ஒரு பெண்ணை மணந்து கொண்டான்.”
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு: அரைகுறையாகச் சமைக்கத் தெரியும்.
திருமணம் ஆனதும் புதுக் குடித்தனம் வைத்தனர் பெற்றோர்கள், .