பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அடக்கிப்பார் அல்லது அடங்கிப்போ !

"என்ன? இன்றுபக்கத்து வீட்டில் பட்டிமண்டபமா ?” என்று பலகணியில் பார்த்தவண்ணம் அவளைக் கேட்டான் அவன். "ஆமாம்! பக்கத்து வீட்டுப் பட்டிமண்டபம் சற்றுக் காரசாரமாக நடைபெறுகிறது ” என்றாள் அவள். கணவன் மனைவி இரண்டுபேருமே பட்டம் பெற்ற பேராசிரியர்கள். அவர்களிடையில் சொற்போருக்குப் பஞ்சமா என்ன? இரண்டு பேருமே நஞ்சில் தோய்த்தெடுத்த கூரிய சொல்லம்புகளால் குறிதவறாமல் அடித்துக் கொள்கிறார்கள் 1'.' என்று கூறிச் சிரித்தான் அவன். 1.ஏன் அத்தான்? நாள்தோறும் போராடும்படி இவர்களிடம் அப்படியென்ன கருத்து வேறுபாடு தோன்றமுடியும் ?”