பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

இன்றியமையாத் தேவையாக இருக்கலாம் : ஆனால், ஆபரணமாக இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் ! * அலுவல் பார்க்கும் ஆடவனும் பெண்ணும் உள்ள குடும்பம், உரிமைப் போராட்டம் மிக்க தொழிற் சங்கமாகத் தானே இன்று இருக்கிறது! போராட்டமே தங்கள் வாழ்க்கையாகக் கொண்ட கணவனும் மனைவியும் வாய்ப்பு நேரும் போது விருந்தினர் முன்னாலும் வேற்றவர் முன்னாலும் நண்பர்கள் முன்னாலும் தடத்திக் காட்டும் பச்சோந்தி நாடகம்’

ஆகா! இவர்களன்றோ இலட்சியத் தம்பதியர் ! என்று எண்ணத் துரண்டுகிறது. ஆனால்இவர்களது பொய்ம்மை முயக்கம் அடுத்த கணமே கசந்து கலைந்து விடுகிறது. இந்த அறிவுப் பெருந்தீனிக்காரர்கள் மேடை கிடைக்கும் போதெல்லாம் களவியலையும், கற்பியலையும். வாழ்க்கைத் துணை நலத்தையும் வாந்தியெடுக்கத் தவறுவதில்லை " - என்று ஒரு சொற்பொழிவே நிகழ்த்தி முடித்தான் அவன் . இது போன்ற குடும்பங்களில் ஆடவர்கள் தவறு செய்வதில்லையா ?"

என்று கேட்டாள் அவள்.