பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 9

அப்பெண்கள் இட்ட வேலையைப் பட்டிமாடுபோல் தலை குனிந்து கொண்டு செய்யும் ஆடவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இங்கே தகுதியும் திறமையும் மிக்க பெண்ணின் கையில் குடுப்ப ஆட்சி தானாகச் சென்று விடுகிறது. மூன்றாவதாக

கணவன் மனைவி இருவருக்குமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

இருக்க வேண்டும்.

குறிப்பாக

மெல்லியலார்க்கு இது மிகவும் தேவை.

  • தொப்பென்ற ஓசை கேட்டால்

துயருறும் என்றும், சோற்றில் உப்பொன்று குறைந்தால் உண்ணல் ஒழியுமே என்றும், ஒன்றை ஒப்பெனில் ஒப்பா விட்டால்

உடைபடும் உள்ளம் என்றும் தப்பேதும் இன்றி என்றன்

தமிழனை அன்பால் காத்தேன்,

என்று பாவேந்தரின் குடும்பவிளக்குத் தலைவி மிக நாகரிகமாகக் குறிப்பிடுகிறகள்' என்று கூறினான் அவன்.

  • அது சரி! உங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?' என்று கேட்டாள் அவள். *கொஞ்சம் சிக்கலான கேள்வி: இருந்தாலும் சொல்வி விடுகிறேன்.

6 س-ه LDه LD