பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

குழந்தையின் தொண்டை வறண்டது: முகம் கிச்சிலிப் பழமாகக்

கன்றிச் சிவந்தது. அது அழும்போது அவளும் அழுதாள்: அவள் உடம்புவேதனையால் நடுங்கியது. நல்லவேளை ! அவள் மாமனாகும் மாமியாரும் ஊரிலிருந்து திடீரென்று வந்தனர். அழுத குழந்தையைமாமியார் அன் போடு பக்குவமாகக் கையில் எடுத்து அணைத்துக் கொண்டார். மாமியாரின் பக்குவமான அணைப்பில் குழந்தையின் அழுகை சற்று ஒய்ந்தது: ஆனால் மீண்டும் தொடங்கியது. கண்ணிர்க் குளமாக இருந்த மருமகளை ஆதரவோடு அனைத்து குழந்தையென்றால்நோயில்லாமல் இருக்குமா? இதற்காக இப்படியா நீ கண் கலங்குவது? என்று மருமகளுக்கு ஆறுதல் கூறிவிட்டு குழந்தையை மேலும் கீழுமாக நோட்டம் விட்டார் மாமியார்.

பச்சைக் குழந்தையின் இடுப்பில்