பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பார்க்க வேண்டும் என்ற ஆவல்! வந்தோம்... பாரித்துவிட்டோம்... கிளம்புகிறோம்..."... என்று மாமியார் சுருக்கமாகச் சொன்னார். அவனும்

  • ஏனம்மா... ! ஏப்பா!

இன்னும் இரண்டுநாள் தங்கிப் போனால் என்ன?" என்று பெற்றோரிடம் கூறவில்லை; பேசாமல் இருந்தான். அவன் அவ்வாறு இருந்தது. அவளுக்கு வியப்பாக இருந்தது மாமன் மாமியை

வழியனுப்பி விட்டு அவள் அவனைப் பார்த்து"உங்கள் பெற்றோரை இன்னும் இரண்டு நாள் இங்கு இருந்து விட்டுப் போகும்படி சொன்னால் உங்கள் வாய்முத்து உதிர்ந்து விடுமா?" என்று கேட்டாள்.

அவன் சிரித்தான்!

  • உனக்கு

என் பெற்றோரைப் பற்றித் தெரியாது. அவர்கள் எப்போதும்,

யார் வீட்டிலும், ஒரு நாளைக்கு மேல் தங்கும் வழக்கம் இல்லை' என்றான் அவன்.