இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
97
கசப்பாக்கி விடுகிறது. பிள்ளைகளை நம்பித்தான் வாழவேண்டும் என்ற நிலைமையில் உள்ள முதியவர்கள் சிலர் துன்பம் அடைகிறார்கள். அந்நிலை பிள்ளைகளின் பண்பாட்டைப் பொறுத்தது'
என்றான் அவன். *நீங்கள் என்னதான் சொன்னாலும் இளமையோடு 5.4u இனக்கவர்ச்சித்தான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படைப் பிணைப்பு என்று நான் கருதுகிறேன்.
இளமை நீங்கியதும் இனக்கவர்ச்சியும் குறைந்து விடுகிறது. சுவையற்றதாகிக் குடும்பவாழ்வும் கசந்துவிடுகிறது!’
என்றாள் அவள்.
- முதுமையில் இனக்கவர்ச்சி குறைந்துவிடுவதாகக் கருதுவது தவறு. கணவன் மனைவியரிடை உள்ள
காதலுணர்வும் முதுமையில் குறைவதில்லை ! அந்தக் காதலை நுகரும் முறைதான் மாறுபடுகிறது. முதுமையிலும் காதலுணர்வு குறையாமல் வாழும் குடும்ப வாழ்க்கைதான் வெற்றி வாழ்க்கை ! இதை அந்தக் காலத்திலேயே -
ஒளவையார் நுட்பமாக ஒரு பாட லில்