பக்கம்:மலர் மணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 மலர்

என்ன எழுதியிருப்பாள்? மாமா மறுத்து விட்டதாக எழுதியிருப்பாளா! அல்லது உடன்பட்டதாக எழுதி யிருப்பாளா ! அல்லது, தேர்தலில் தோற்றுவிட்டதல்ை எரிச்சலும் புகைச்சலுமா யிருக்கிறார் என்று எழுதி யிருப்பாளா? ஒருவேளை, உங்கள் பெண் வேண்டாம் ; பரியத்தை நிறுத்தி விடலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லியனுப்பி யிருக்க, அதைப் பற்றி ஏதாவது எழுதி யிருப்பாளா? அல்லது நம் அப்பா ஒத்துக்கொண்டாராஇல்லையா என்று விசாரித்து எழுதியிருப்பாளா? இல்லை -பட்டணத்துக்கு எப்பொழுது புறப்படுகிறீர்கள் என்று கேட்டு எழுதியிருப்பாளா? ஒருவேளை, இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் தன்னை வந்து சந்திக்கும்படி எழுதி யிருப்பாளா? அல்லது, மாமா உடன்படாததால், தன்னை மறந்துவிடும்படி எழுதியிருப்பாளா? என்று என் மனம் என்னென்னவோ எண்ணிக்கொண் டிருந்தது. என் கால்களோ, வேகமாகப் படிகளைக் கடந்து வீட்டு மேல் மாடியை அடைந்தன. கைகளோ விரைந்து உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் பிரித்தன. கண்களோ பரபரப்புடன் படிக்கத் தொடங்கின : .

அன்புள்ள அத்தான் !

வணக்கம்.

நேற்று ஊர்வலத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந் ததும், நான் நேரே அப்பாவிடம் ஒடினேன். அவர் பைத்தியம் பிடித்தவர்போல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். அப்பா’ என்று குரல் கொடுத்தேன். “ அம்மா அல்லி’ என்று அன்போடு என்னே அழைத்தார் ; வந்து விட்டாயா என்று பரிவோடு கேட்டார். இப் போதுதானப்பா வந்தேன். ஏன் படுத்துக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/100&oldid=655941" இலிருந்து மீள்விக்கப்பட்டது