பக்கம்:மலர் மணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 11

விட்டு யான் கல்லூரிக்கு வந்துவிட்டேன். வந்த சில காட்களில் விரைவுக்கடிதம் வந்தால் எனக்கு என்ன செய்ய ஒடும் ?

கடிதத்தைப் பி ரி த் துப் பார்க்காமலேயே, என் அன்னேயின் உடல்நிலையைப் பற்றியதுதான் என்று யான் எவ்வாறு துணியமுடியும்? வேறு எங்கிருந் தாவது வந்திருக்கக் கூடாதா? ஒரு நல்ல காரியத்தை விரைவில் முடிக்கவேண்டும் என்று யாராவது எழுதி யிருக்கக் கூடாதா ? இன்னும் மறைக்க வேண்டிய தேன் ? என் தாய் க் கு உடல்நலம் இன்மையாலும் மாதமும் தையாக இருப்பதாலும் என் திருமணத்தை விரைவில் நடத்திவிடலாம் என்று எண்ணிக்கொண் டிருக்கின்ற என் தந்தையின் விருப்பமறிய வட்டமிட்டுக் கொண்டிருக்கும் கழுகுகளாகிய வெளியூர்ப் பெண் தர கர்கள் சிலர், என்னேப் பெண் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு செல்வதாகவும், அது குறித்து அண்மையில் கடிதம் எழுதுவதாகவும் சொல்லிச் சொல்லி என்னைத் திணறடித்துக்கொண் டிருந்தார்களே, அவர் களில் ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு ஏன் எனக்கு எழுதி யிருக்கக் கூடாது? இவ்வாறு எண்ணியபோது எனது திகில் குறைந்தது ; உடலில் ஒருவித விறுவிறுப்பு ஏறிற்று. -

உணர்ச்சிவயப்பட்டவய்ை, கடிதத்தைப் பிரிக்கா மலேயே, உறையின் மேலிருந்த அஞ்சல் முத்திரையைக் கூர்ந்து நோக்கினேன். அதில், மலைச்சாரல்’ என்ற எங்கள் ஊர்ப் பெயரே புலப்பட்டது. மீண்டும் எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. தாயின் உடல்நிலை மிகவும் சீர் கேடடைந்திருப்பதாகத் தந்தை எழுதியிருக்க வேண்டு மெனப் பதறினேன். ஆயின் முகவரியை உற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/13&oldid=655973" இலிருந்து மீள்விக்கப்பட்டது